திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் ஊராட்சி தர்பார் பாளையத்தில் உள்ள பொதுமக்கள் அரசு நியாய விலை கடையில் வாங்க வேண்டிய பொருட்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வந்த நிலையில் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் தர்பார் பாளையத்தில் புதிதாக நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டு அதனை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.